- 30 May, 2026
மங்களூரு, மே 29, 2026: 20-வது தேசிய இளம் கிறிஸ்தவ மாணவர்கள்/இளம் மாணவர் இயக்கத்தின் (YCS/YSM) தேசியப் பேரவைக் கூட்டம், மங்களூரு புனித சூசையப்பர் பொறியியல் கல்லூரியில் மே 28 அன்று தொடங்கியது. தலைமைத்துவம், நம்பிக்கை உருவாக்கம் மற்றும் இயக்கத்தின் எதிர்காலம் குறித்த இந்த இரண்டு நாள் மாநாட்டில், நாட்டின் ஏழு பிராந்தியங்களைச் சேர்ந்த 120 மாணவர் பகராளிகள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக பிராந்திய YCS/YSM மற்றும் மங்களூரு மறைமாவட்டத்தால் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு, உடுப்பி ஆயர் லெஸ்லி கிளிஃபோர்ட் டிசோசா தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் தொடங்கியது. தொடக்க நூல் 1:28 வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், இளைஞர்களைக் கடவுளுடன் தனிப்பட்ட உறவை வளர்க்கவும், இயக்கத்தின் 'நோக்கு, சீர்தூக்கு, செயல்படு' (See, Judge and Act) என்ற வழிமுறையைப் பின்பற்றி, 'உரையாடல், பகுத்தறிவு மற்றும் முடிவுகள்' என்ற கொள்கைகளில் உறுதியாக இருக்கவும் வலியுறுத்தினார்.
தேசியத் தலைவர் ஆன்சன் நஸ்ரெத், தேசியச் செயலாளர் மோனெட் மற்றும் அபய் பில்வால் ஆகியோர் இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்குகின்றனர். ஆயர் இக்னேஷியஸ் டிசோசா மற்றும் அருள்தந்தை ஜான் பர்மன் MSFS உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டின் போது மூன்றாண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், பதின்ம வயதினருக்கான ஊழியம், விரிவாக்க முயற்சிகள், இயக்கத்தின் அடையாளத்தை வலுப்படுத்துதல் மற்றும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) ஆதரவைப் பெறுதல் போன்ற முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய தேசிய தலைமைத்துவக் குழுவைத் தேர்ந்தெடுப்பதோடு இந்த மாநாடு நிறைவடையும்.
By Mr. Anson Nazreth
National President
YCSYSM India
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP